கோவை அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் விடுதிகளில் பராமரிப்பு மற்றும் உணவு சரியில்லை என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திமுக ஆதரவளிக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
தமிழகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் விடுதி மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவளிக்கப்படுவதில்லை.
கடந்த 2014 - 2015 ம் நிதிநிலை ஆண்டில் தமிழக அரசு ஆதி திராவிட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள ருபாய் 41 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை. இது மட்டுமல்லாமல், விடுதிகள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment