Monday, April 11, 2016

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி மதிமுக நடைபயணம்

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை 2012ம் ஆண்டே முடிக்கக் கோரி கிணத்துக்கடவு முதல் போத்தனூர் வரை அப்போதைய கோவை புறநகர் மாவட்ட செயலாளரான எனது தலைமையில் நடைபயணம் நடைபெற்றது (08-04-2012). 

ஆரம்பத்திலேயே நமக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டது. இரண்டு இடங்களில் நம்மை மறிக்க முயன்று தோற்றுப் போய் வேறு வழியின்று பின்னர் பாதுகாப்பு வழங்கினர். 

நடைபயணத்தை மறுமலர்ச்சி திமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் துவக்கி வைத்தார். மக்களுக்கான போராட்டத்தில் நாம் முன்னிற்போம் என்பது மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டது. 

போத்தனூர் ஆய்வாளர் கழகத்தை பற்றியும், நம்மைப் பற்றியும் உயர்வாக பேசிய போது, இதற்கெல்லாம் காரணமான இந்த அளவுக்கு நம்மை மதிக்கச் செய்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி.




No comments:

Post a Comment