Saturday, April 9, 2016

கோவை: சத்துணவு மையங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி நவீனப்படுத்தினாலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் விறகு அடுப்பு கலாச்சாரமே தொடர்கிறது. இதனால், சத்துணவு ஊழியர்களின் சுகாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள சத்துணவு மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுதல், பழுது பார்த்தல், குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் கழிப்பறைகள் அமைத்தல், மின் இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் என பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது.

சத்துணவு மையங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றுள்ளோம். இதனடிப்படையில் பார்த்தால், சத்துணவுக் கூடங்களுக்கு காஸ் இணைப்பு வழங்கி மேம்படுத்த திட்டத்தைச் செயல்படுத்தும் அரசு, அதனைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபடவேண்டும். பல பகுதிகளில் காஸ் இணைப்புகள் பயன்படுத்தாமல் முடக்கப்பட்டு, விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழக அரசின் நிதி சுமார் ருபாய் 100 கோடி வரை வீணாகிறது. அரசின் நிதியை வீணாக்காமல், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.






No comments:

Post a Comment