Saturday, April 9, 2016

கோவை வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு

கோவை: நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் கோவை வனக்கல்லூரி மாணவர்களை 25.07.2014 அன்று நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.

ஏறத்தாழ 51 மாணவிகள் உட்பட நூற்று ஐம்பத்தொரு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர், கழிவறை என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் துண்டிக்கப்பட்ட பிறகும் மாணவத் தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். உடனடியாக இதை மாவட்ட வருவாய் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென் றேன். போராடும் மாணவர்களுக்கு உடனடியாக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று வலியுறுத்த, அதைச் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார் வருவாய் அலுவலர்

தணிக்கைக்குழு உறுப்பினர் டி.டி.ஆர், பொருளாளர் பி.என். ஆர், நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், மாநில மாணவரணித் துணைச் செயலாளர் உமாபதி, கோவை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இள.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment