Friday, April 22, 2016

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

மதுக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டது

மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மிகவும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருகின்றனர். பிரசவம் மற்றும் ஸ்கேன் எடுக்கவும் மதுக்கரை சுகாதார நிலையத்திற்கே சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரும் அனுப்பப்படுகின்றனர். ஆனாலும் கூட தற்போது தனியாக மகப்பேறு மருத்துவ இல்லை. சரியான அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை.

கோவையின் தெற்குப் பகுதியில் எங்குமே அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்படவில்லை. மிகவும் அதிக நோயாளிகள் வருகின்ற மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்ற மனுவோடு மதுக்கரைப் பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



அதேபோல, மயிலேரிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது.






No comments:

Post a Comment