Friday, April 22, 2016

வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம்

கோவை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளலூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு பூட்டு போடும் போராட்டம் அக்டோபர் 14ம் தேதி 2012ல் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்போதைய புறநகர் மாவட்டச் செயலாளராகிய நான், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜுனராஜ் ஆகியோர் தலைமையில் 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெள்ளலூர் ரோடு - ஜி.டி. டேங்க் சந்திப்பில் இருந்து 1 கீ.மீ.தூரம் ஊர்வலமாக வந்து குப்பைக்கிடங்கின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட முயன்றோம்.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு  நின்ற காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தோம். குப்பைக் கிடங்கை முழுமையாக இங்கிருந்து அப்புறப்படுத்தக் கோரி கோசங்கள் எழுப்பினோம். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தடையை மீறி குப்பைக் கிடங்கை நோக்கி செல்ல முயன்றோம். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எங்களை கைது செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "ஊருக்கு அப்பால் பல கீ.மீ.தொலைவில்தான் குப்பைக் கிடங்கு இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி இதுபோன்ற தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்றேன்.



No comments:

Post a Comment