Wednesday, April 20, 2016

போத்தனூர் அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கோவை: போத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி 16.12.2015 அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்;

15.12.2015 அன்று பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துள்ளது. இது மிகவும் வருத்தப்படக்கூடிய சம்பவம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. 

போத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம்
  • 24 மணிநேரமும் மருத்துவர் உள்ள வகையில் மேம்படுத்த வேண்டும்
  • 30 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக மாற்றப்பட வேண்டும்
  • மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்
  • பிரசவத்தின் அறுவை சிகிச்சையும் இங்கேயே செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்த வேண்டும்
  • சுந்தராபுரம் பகுதியில் புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும்
  • தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்



No comments:

Post a Comment