கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையின் இடத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளருக்குக் கடிதம் 16.11.2013 அன்று எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது "சென்னையில் தலைமைச் செயலகத்தை மாற்றி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியில் மருத்துவமனை வளாகம் வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தனி நபர்களுக்கும், மாநகராட்சிக்கும் மட்டுமே பலன் கிடைக்கும், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. மக்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதை கைவிட வேண்டும்"
No comments:
Post a Comment