Monday, March 28, 2016

பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தில் சேர்க்க மதிமுக வலியுறுத்தல்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டங்களை ஆய்வு செய்து வருகிற தேசிய நீர்வள மேம்பாட்டு அமைப்பு (NWDA) தமிழகத்திற்கு பென்னாறு - பாலாறு - காவிரி இணைப்புத் திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் பம்பா - அச்சங்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் ஆகியற்றை பட்டியலிட்டுள்ளது. 

இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இதனால் பயனில்லை. கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயன்பெற பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். கோவை மாவட்டத்தின் எதிர்கால நலன் கருதி இத்திட்டத்தை தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தில் சேர்த்து உடனடியாக DPR தயாரிக்க மத்திய அரசிற்கும் தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்புக்கும் கோரிக்கை வைக்க வலியுறுத்தி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சருக்கு மதிமுக சார்பில் 07.08.2014 அன்று கடிதம் எழுதப்பட்டது.






No comments:

Post a Comment