தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இளையதலைமுறையினர் கலந்து கொண்ட மராத்தான் போட்டிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டி நவம்பர் 23ம் தேதி ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு சுந்தராபுரத்தில் உள்ள உழவர் சந்தையில் கழகப் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. போட்டி மதுக்கரை மார்கெட்டில் முடிவுற்றது. இந்த ஓட்டத்தில் 20,000 மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கெடுத்தவர்களுடன் வைகோ அவர்களும் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஓடி கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வைகோ அவர்களால் வழங்கப்பட்டது.
ஓடுவோம்! நடப்போம்!! மதுவை விரட்டுவோம்!!!
No comments:
Post a Comment