Sunday, March 27, 2016

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பயனாளிகள் காத்திருக்க தேவையான வசதியான செய்து தரக் கோரிக்கை

கோவையில் சித்ரா அருகில் செயல்பட்டு வரும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வருபவர்கள் மட்டுமே அலுவலகத்துக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வரும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆகையால் அவர்கள் அலுவலகத்தின் வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது, பல மணிநேரங்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படிக் காத்திருப்பவர்கள் நிழலில் ஒதுங்கவோ, அல்லது கழிப்பிட வசதியோ எதுவும் செய்து தரப்படவில்லை. ஆகவே உடனடியாக கழிப்பிட வசதியுடன் கூடிய  வரவேற்பு அறை அமைத்துத் தர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் 24.04.2015 அன்று எழுதப்பட்டது. 


அதே நாளில் தற்காலிக ஏற்பாட்டாக நிழற்குடை அமைத்துத் தர வலியுறுத்தி கோவை மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதப்பட்டது.


மேலும், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்ட தேவையான நிலம் ஒதுக்கித் தர வலியுறுத்தி தமிழகத் தலைமைச் செயலருக்கு 24.04.2015 அன்று கடிதம் எழுதப்பட்டது.




No comments:

Post a Comment