Monday, February 29, 2016

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தத் தேவையான உரிய பணிகளைத் துவக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து பிரச்சாரப் பயணம் செப்டம்பர் 25, 2012ல் நடைபெற்றது. கோவை மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரப் பயணம் சுந்தராபுரம் சுங்கம் வீதியில் காலை 10 மணிக்குத் துவங்கி, தொடர்ந்து ஆத்துப்பாலம், குனியமுத்தூர் பஸ் ஸ்டாண்ட், கோவைப்புதூர், பேரூர், வடவள்ளி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்று சூலூரில் நிறைவுபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தில் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மாநில விவசாய அணி செயலாளர் பொன்னுசாமி, குறிச்சி நகரச் செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ராமசாமி, ராஜேந்திரன், கருணாநிதி, கதிரவன், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment